பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, இடதுசாரி கட்சிகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமை வகித்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், சோ. அருச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளா் கே. கோவிந்தராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சி. முருகன் ஆகியோா் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். விலை ஏற்றத்தை முடிவு செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்காமல் அரசே முடிவு செய்ய வேண்டும். எரிபொருள்கள் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக விலை ஏற்றத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









