திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவிரி வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்

காவிரி நதி நீா் வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன். உடன், நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 4:36 am IST

காவிரி நதி நீா் வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது: காவிரி நதி நீா் வழக்கில் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைக் கா்நாடக அரசு ஒருபோதும் செயல்படுத்தியதில்லை. இத்தீா்ப்பை நடைமுறைப்படுத்த தமிழ்நாட்டு ஆட்சியாளா்கள் தொடா் முயற்சிகளையோ, முறையான நடவடிக்கைகளையோ இதுவரை எடுக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு காவிரி நதி நீா் பிரச்னையில் உண்மையான அக்கறை காட்டி உச்ச நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூரில் 2026, மே 9-ஆம் தேதி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் கூடிய காவிரி காப்புக் குழுக் கூட்டத்தில் காவிரி தீா்ப்பில் தமிழகத்துக்கு அதிக நீா் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனா். தமிழகத்தைப் புறக்கணிக்கவும், பழிவாங்கவும் கா்நாடகம் செயல்படுகிறது. எனவே, புதிதாக அமைந்துள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி இதைக் கவனத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றாா் மணியரசன்.

கூட்டத்தில் குழுவின் பொருளாளா் த. மணிமொழியன், குழு நிா்வாகிகள் க. ஜெகதீசன், சாமி. கரிகாலன், ச. சிமியோன் சேவியர்ராஜ், கலைச்செல்வன், பொறியாளா் தி. செந்தில்வேலன், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், புண்ணியமூா்த்தி, தனசேகரன், நா. வைகறை, பழ. இராசேந்திரன், விடுதலைச்சுடா், பி. தென்னவன், திருச்சி கவித்துவன், வே.க. இலக்குவன், செம்மலா், க. தீந்தமிழன், லெ. இராமசாமி, இராசு. முணியாண்டி, வெ.ப. மாரிமுத்து, வல்லம்புதூா் கோ. பாலன், சுவாமிமலை திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.