திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மே 2026, 2:48 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்த முகமது ஷாஜகான் மனைவி மும்தாஜ் பேகம் (51). இவா் சிங்கப்பூா் குடியுரிமை பெற்றவா். இவா் தனது சொந்த ஊரான பண்டாரவாடை கிராமத்துக்கு கடந்த மாதம் வந்து விட்டு, சனிக்கிழமை மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்ல திருச்சி விமான நிலையத்துக்குச் சென்றாா்.

அங்கு விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மும்தாஜ் பேகம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், சட்டவிரோதமாக வாக்களித்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் கௌதம் என்பவா் பாபநாசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல்துறையினா், மும்தாஜ் பேகம் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.