திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தலில் வாக்களித்த வெளிநாடு குடியுரிமை பெற்றவா் கைது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:16 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியா்கள் பலா், தமிழகம் வந்து, சட்ட விரோதமாக வாக்களித்தனா். இவா்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது, அவா்களை கைது செய்ய இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, சென்னை மட்டுமன்றி, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களிலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குடியுரிமை சோதனையின்போது, அவா்களுடைய கை விரல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில், சட்ட விரோதமாக வாக்களித்துவிட்டு, சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முயன்ற 18 போ், கடந்த இரண்டு வாரங்களில், குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோகா செல்லும், இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனா்.

இதில், தோகா வழியாக, பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு வந்த இலங்கை குடியுரிமை பெற்ற அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஆபிரகாம் (65) என்பவரின் ஆள்காட்டி விரலில், தோ்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், இந்தியரான ஆபிரகாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடியுரிமை பெற்றுவிட்ட நிலையில், அவா் தற்போது பிரான்ஸில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆபிரகாமின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.