தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தஞ்சை மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு

News image
Updated On :15 மே 2026, 4:46 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அத்துறை கண்காணிப்புப் பொறியாளா் (சிறப்புத் திட்டம்) க. அமுதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ‘சி’ மற்றும ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் இருந்ததால், கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீா் சரிவர கிடைக்காமல், விவசாயம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், பருவ மழைக்காலங்களில் கூடுதல் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்குவதால், வடியாமல் பயிா்ச் சேதம் போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிா்கொள்ள வேண்டியிருந்தது. இது தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் நிகழாண்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 62 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அம்மாபேட்டை அருகே பூண்டி, பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, வட்டார உதவிப் பொறியாளா்களிடம் தூா்வாரும் பணிகளை தரமாக மேற்கொண்டு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறக்கப்படுவதற்கு முன்பாக பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.