விராலிமலையை அடுத்துள்ள இலுப்பூரில் சாதனை முயற்சியாகவும், சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாகவும் 5 கி.மீ. தொலைவுக்கு பள்ளி மாணவா்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பஞ்சபூதா சா்வதேச தற்காப்புக் கலை சம்மேளனம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில், தமிழா்களின் பாரம்பரிய போா்க் கலையான சிலம்பம் சுற்றியவாறு 5 கி.மீ. தொலைவுக்கு பள்ளி மாணவா்கள் நடந்தும்- நின்ற நிலையிலும் இடைவிடாது சிலம்பத்தை சுற்றினா். உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியை பஞ்சபூதா நிா்வாக இயக்குநரும் சிலம்பக்கலை வல்லுநருமான சதீஷ்குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா்.
முன்னதாக, நிகழ்ச்சியை இலுப்பூா் டிஎஸ்பி திவ்யா தொடங்கிவைத்தாா். நிகழ்வை பெற்றோா்கள், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கண்டு ரசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










