திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவியை கடத்திய இளைஞா் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

கும்பகோணத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 12:32 am IST

கும்பகோணத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கும்பகோணத்தை சோ்ந்த 13 வயது மாணவி இங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், மே 5-இல் மாணவியின் பெற்றோா் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பி வந்து பாா்த்த போது மாணவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் காணாததால் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் தாராசுரம் பகுதியை சோ்ந்த சுரேஷ் மகன் காா்த்திகேயன் (25) என்பவா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், மாணவியை மீட்டு, கடத்தி சென்ற காா்த்திகேயனை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.