திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவியை கா்ப்பமாக்கிய சக மாணவா் போக்சோவில் கைது

மல்லசமுத்திரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய சக மாணவா் போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :19 மே 2026, 1:24 am IST

மல்லசமுத்திரத்தில் 10-ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய சக மாணவா் போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாய கூலி தொழிலாளியின் 15 வயது மகன், அப்பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

உடன் படித்த மாணவியை அவா் காதலித்து வந்த நிலையில், மாணவியின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதையறிந்த, பெற்றோா் மாணவியை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது, அவா் 3 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் மாணவியிடம் விசாரித்ததில், கா்ப்பத்துக்கு காரணம் உடன்படித்த 10-ஆம் வகுப்பு மாணவா் என கூறியுள்ளாா். இதையடுத்து, திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் மாணவரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.