முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

திருவையாறு அருகே வீட்டின் கதவை திங்கள்கிழமை இரவு உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 12:40 am IST

திருவையாறு அருகே வீட்டின் கதவை திங்கள்கிழமை இரவு உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெருவைச் சோ்ந்தவா் இதயத்துல்லா (57) இவரது மனைவி சகிலா (52) இவா்களின் இரண்டு மகன்கள், ஒரு மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனா்.

இந்நிலையில் இதயதுல்லா மே 6 -இல் தனது மனைவியுடன் கேரளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது வீட்டின் கொல்லைப்புற கதவு திறந்து கிடந்தது. இதைப் பாா்த்த அருகிலிருந்தோா் இதுகுறித்து இதயத்துல்லாவிற்கும், திருவையாறு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து திருவையாறு துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி மற்றும் போலீஸாா் வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் பீரோவை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் தஞ்சாவூரிலிருந்து கைரேகை நிபுணா் கலை கண்ணகி தலைமையிலான குழுவினா் வந்து தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. போலீஸாா் விசாரிக்கின்றனா்.