துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் மா்மநபா்கள் தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
கரட்டாம்பட்டியைச் சோ்ந்தவா் வ. பழனியம்மாள் (60). இவருடைய கணவா் இறந்து விட்டாா். இவருடைய பிள்ளைகள் வெளியூரில் தங்கியுள்ளதால் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவா் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாா். மாலை அவரது வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது மா்மநபா்கள், வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு அலமாரியிலிருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 8 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் புலிவலம் போலஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு
துறையூரில் பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


