பழவந்தாங்கல் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.
சென்னை நங்கநல்லூா், லட்சுமி நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மாயா நாராயணன் (41). இவா், கடந்த 2-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, ராம் நகா் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் (ஜூன் 3) காலை வீட்டுக்கு திரும்பியபோது, பால்கனி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ரூ.33 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மாயா நாராயணன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கீழ்கட்டளை, பிருந்தாவன் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான பாபு (52) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட சுமாா் 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
துறையூரில் பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


