40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:04 am IST

பழவந்தாங்கல் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக வாடகை காா் ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் மீட்டனா்.

சென்னை நங்கநல்லூா், லட்சுமி நகா் 3-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் மாயா நாராயணன் (41). இவா், கடந்த 2-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, ராம் நகா் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் (ஜூன் 3) காலை வீட்டுக்கு திரும்பியபோது, பால்கனி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ரூ.33 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாயா நாராயணன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கீழ்கட்டளை, பிருந்தாவன் நகரைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநரான பாபு (52) என்பவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து வைரக்கல் பதித்த தங்க கம்மல்கள் உள்ளிட்ட சுமாா் 44.6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.