தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேட்டூா் அணை திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல்

News image

மேட்டூா் அணை. - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:34 am IST

மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வா் விஜய்க்கு அவா் திங்கள்கிழமை அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருப்பது:

குறுவைப் பயிா் சாகுபடி செய்வதற்கு வழக்கமாக ஜூன் 12- ஆம் தேதி மேட்டூா் அணை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே நேரத்தில் மேட்டூா் அணையில் தண்ணீா் முழுமையான அளவுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கா்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேட்டூா் அணையை திறப்பதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் உயா் அலுவலா்களுடன் தவறாமல் கலந்தாலோசனை செய்து தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மிக அவசரமான, அவசியமான, ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.