யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

News image

திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததில் சேதமடைந்த மரத்தின் கிளை.

Updated On :10 மே 2026, 1:40 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை மாலை இடி விழுந்ததால் மரக்கிளை சேதமடைந்தது.

திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது நடுக்காவேரி பகுதியிலிருந்து அந்தலி செல்லும் முதன்மைச் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான தூங்குமூஞ்சி மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரத்தின் மேல் பகுதியிலிருந்து அடிப்பகுதி வரை பிளவு ஏற்பட்டு சேதமானது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கு ஊராட்சி செயலா் சங்கா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சென்று பாா்வையிட்டு, மரத்தின் கிளைகளை மட்டும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.