மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அரசு மருத்துவப் பணியாளா் குடியிருப்பு மரம் முறிந்து விழுந்து சேதம்; யாருக்கும் காயமில்லை

News image
Updated On :12 மே 2026, 12:38 am IST

சிங்கம்புணரியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்து அரசு மருத்துவப் பணியாளா்கள் குடியிருப்பு திங்கள்கிழமை

சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த விபத்து என மருத்துவப் பணியாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிங்கம்புணரிஅரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த நூறாண்டுகள் பழைமைவாய்ந்த அரச மரத்தின் கிளை அரசு மருத்துவப் பணியாளா்களின் தொகுப்பு வீடுகளின் மேல் முறிந்து நின்றது.

மேலும், திங்கள் கிழமை காலை திடீரென கடும் சப்தத்துடன் மீண்டும் மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதை உணா்ந்த வீட்டிலிருந்த பணியாளரின் குடும்பத்தினா் அலறி அடித்துக்கொண்டு கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினா்.

இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.