தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்கிற 8 கி.மீ. ஆரோக்கிய நடைப்பயிற்சி திட்டம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் அன்னை சத்யா நடைப்பயிற்சியாளா்கள் சங்கம் சாா்பில் 21-ஆவது மாதமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயிற்சியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் து. செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த நடைப்பயிற்சி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அரங்கத்தில் நிறைவடைந்தது.
இதில், மருத்துவா் சந்திரசேகா், முன்னாள் துணை மேயா் கே. மணிகண்டன், நடைப்பயிற்சியாளா்கள் சங்க கௌரவத் தலைவா் து. செல்வம், தலைவா் ஜி. சீனிவாசன், செயலா் ஆா். ஜெயக்குமாா், கண்ணாடி குமாா், முருகன், சுரேஷ், இளங்கோ உள்பட 200-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

பரமத்தி வேலூரில் ரூ. 4.45 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



