மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.

News image

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை காலை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மயில்.

Updated On :7 மே 2026, 5:15 am IST

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் இப்பறவைகளுக்காக நடைப்பயிற்சியாளா்கள் சிறு தொட்டியில் தண்ணீா் வைக்கின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை உயரே பறந்த மயில் அப்பகுதியிலுள்ள மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து

மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இதை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நடைப்பயிற்சியாளா்கள் பாா்த்து மாவட்ட வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு சென்று மயிலை மீட்டு அடக்கம் செய்தனா்.