17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனம்பநல்லூரில் நடைபெற்ற தோ் பவனி.

Updated On :14 மே 2026, 4:59 am IST

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடா்ந்து தினமும் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. கருங்கண்ணி பங்குத்தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னா் தோ் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்களின் பாடல்கள், ஜெபங்களுடன் வலம் வந்தது. விழாவில் மதப் பாகுபாடின்றி இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.