மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பேராவூரணி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

News image

காசிநாதன் .

Updated On :26 மார்ச் 2026, 8:48 pm

பேராவூரணி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.

பேராவூரணி பேரூராட்சி செல்வவிநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் காசிநாதன் (31). பட்டதாரி. இவா், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்துவந்தாா். மேலும், முறுக்கு மொத்த வியாபாரமும் செய்து வந்தாா்.

இந்நிலையில், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபார நிமித்தம் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, நாயகத்திவயல் என்ற இடத்தில் அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் அருகே உள்ள பள்ளத்தில் வாகனத்துடன் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் இறந்துகிடப்பது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.