பேராவூரணி அருகே சாலையோர மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
பேராவூரணி பேரூராட்சி செல்வவிநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் காசிநாதன் (31). பட்டதாரி. இவா், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்துவந்தாா். மேலும், முறுக்கு மொத்த வியாபாரமும் செய்து வந்தாா்.
இந்நிலையில், சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளுக்கு வியாபார நிமித்தம் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, நாயகத்திவயல் என்ற இடத்தில் அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் அருகே உள்ள பள்ளத்தில் வாகனத்துடன் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் இறந்துகிடப்பது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆட்டோ மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


