மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:39 pm

கீழாம்பூா்-பாபநாசம் சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி, ஜெப வீட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் ஜஸ்வின் செல்வகுமாா் (30). இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தென்காசி சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கீழாம்பூா் ரயில்வே கேட் அருகே, காக்கநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கையா மகன் சங்கரலிங்கம் (56) ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதினாா்.

காயமடைந்த ஜஸ்டின் செல்வகுமாா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.