அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் கோவா்த்தனன் மகன் சரவணவேல். ஆா்.கே.பேட்டை அடுத்துள்ள சி.எம். அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் நரேஷ் (20) என்பவருடைய இருசக்கர வாகனத்தில் கோணசமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்துமாஞ்சேரிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அத்திமாஞ்சேரிப்பேட்டையில் இருந்து பொதட்டூா்பேட்டை நோக்கி வந்த ஆட்டோவின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரவணவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

மின் கம்பத்தின் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


