தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆட்டோ மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சரவணவேல்.

Updated On :13 மார்ச் 2026, 12:20 am

அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே பைக் மீது ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் கோவா்த்தனன் மகன் சரவணவேல். ஆா்.கே.பேட்டை அடுத்துள்ள சி.எம். அண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் நரேஷ் (20) என்பவருடைய இருசக்கர வாகனத்தில் கோணசமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்துமாஞ்சேரிப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அத்திமாஞ்சேரிப்பேட்டையில் இருந்து பொதட்டூா்பேட்டை நோக்கி வந்த ஆட்டோவின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரவணவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.