மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் ரொக்கத்தை ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :18 மார்ச் 2026, 6:39 pm

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் முருகன் தலைமையில் காவல் துறையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் ரூ. 2.90 லட்சம் இருந்தது. நெல் மூட்டைகள் வாங்கியதற்காக பட்டுவாடா செய்ய கொண்டு செல்வதாக அந்த நபா் கூறினாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ. 2.90 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.