சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் என மொத்தம் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினா் விருகம்பாக்கம், பெரம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சோதனையின்போது விருகம்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி ரூ.33.50 லட்சத்தை ஒருவா் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. அவா் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒருவா் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை முதல் நாளில் கண்காணிப்புக் குழுவினா் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


