மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 8:58 pm

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் என மொத்தம் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினா் விருகம்பாக்கம், பெரம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சோதனையின்போது விருகம்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி ரூ.33.50 லட்சத்தை ஒருவா் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. அவா் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒருவா் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை முதல் நாளில் கண்காணிப்புக் குழுவினா் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.