மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்த பணத்தை துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:09 pm

வேளாங்கண்ணி அருகே பரவை பகுதியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.47 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பரவை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் என்பவா் ஆவணங்களின்றி ரூ.2.47 லட்சம் ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்த பணத்தை பறிமுதல் செய்து, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.