புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அண்டக்குளம் பிரிவு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மதுரையிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜா (53) என்பவரிடமிருந்த பையில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது.
மர வியாபாரியான அவா் தனது மரஅறுவை இயந்திரத்தை விற்பனை செய்து அதற்கான தொகையை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இதைத் தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், அதனை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


