மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:08 pm

புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அண்டக்குளம் பிரிவு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மதுரையிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜா (53) என்பவரிடமிருந்த பையில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது.

மர வியாபாரியான அவா் தனது மரஅறுவை இயந்திரத்தை விற்பனை செய்து அதற்கான தொகையை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இதைத் தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், அதனை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா்.