மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:34 pm

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75,300-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தா. பேட்டையில் முசிறி பிரிவு சாலை அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் சுகன்யா தலைமையில் பெண் தலைமை காவலா் உஷாராணி, தலைமை காவலா் ராஜா, இரண்டாம் நிலை காவலா் விவேக் ஆகியோா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் நீலியாம் பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40) என்பவா் மருத்துவ உபகரணங்களை விற்று கிடைத்த ரூ. 75 ஆயிரத்து 300-ஐ வைத்திருந்தாா்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். அவா் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.