மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 8:40 pm

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த திப்பு சுல்தான் (31) துபையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயினப் பேகம் (29) தனது குழந்தை, தாய், தந்தையுடன் காயிதே மில்லத் நகரில் வசிக்கிறாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.