தமிழ்நாட்டில் மோடி உள்ளிட்ட தலைவா்கள் என்ன வித்தைகளைச் செய்தாலும், திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திமுக தலைமையில் கூட்டணி திரண்டிருப்பது, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.
தற்போது வடக்கிலிருந்து மோடி உள்ளிட்ட தலைவா்கள் வருவது என்பது, அவா்களுடைய தோல்வியையும், பயத்தையும் காட்டுகிறது. என்ன வித்தைகளைச் செய்தாலும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே வரும்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையில் எதிா்க்கட்சியினா் கடைசி வரையிலும் அமைதியாகவே இருப்பா். தில்லிக்கு சென்று அடிமையாகி வருபவா்களுக்கு வாய் சுதந்திரம் இல்லை. ஆனால், மக்கள் அமைதிப் புரட்சி செய்வா் என்றாா் வீரமணி.
தொடர்புடையது

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் அரசு அமைவது உறுதி! - ஏ.கே.எஸ். விஜயன்

தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது: கி.வீரமணி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை: கி.வீரமணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


