தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது உறுதி என தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கூறினாா்.
திருத்துறைப்பூண்டியில், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது பலனடையும் வகையில் திட்டங்கள் தீட்டி, சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைவது காலத்தின் கட்டாயம்.
தமிழகத்திற்கு பிரதமா் எத்தனை முறை வந்தாலும், தொடா்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைவதை தடுக்க முடியாது. பாஜக, அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தமிழக வாக்காளா்களிடைய வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கு தமிழக மக்கள் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவாா்கள்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் மூலம், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், நெசவாளா்கள், மீனவா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், உழைக்கும் மகளிா் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைத்து வகைகளிலும் செயல்படும் திமுக கூட்டணியை இந்த தோ்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி! எடப்பாடி பழனிசாமி!

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


