மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க மக்கள் தயாராகிவிட்டதாக திராவிடா் கழக தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

News image

ஒசூா் ராம்நகரில் வாக்கு சேகரிக்க வந்த திராவிடா் கழக தலைவா் கி. வீரமணியை வரவேற்ற திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:36 pm

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க மக்கள் தயாராகிவிட்டதாக திராவிடா் கழக தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகே திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யாவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சியாக இருக்கிறாா்கள். திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த மக்கள் உறுதியாக உள்ளனா். ஒசூா் தொகுதியில் ரூ. 3,500 கோடியில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ் செயல்படுத்தியுள்ளாா்.

ஏழை குடும்பங்கள் செழிக்க இல்லத்தரசி கூப்பன் ரூ. 8,000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாா். ரூ 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, முதியோா் மற்றும் கைம்பெண் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. மகளிா் உரிமைத் தொகை ரூ. 2000, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளாா். வரும் தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்திற்கு திக மாவட்டத் தலைவா் வனவேந்தன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் செல்வம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் சின்னசாமி, காங்கிரஸ் கட்சி நீலகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.