தொகுதி வரைமுறை என்ற பெயரில் மத்திய அரசு பெரிய சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே. மதியழகனை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செவ்வாக்கிழமை வாக்கு சேகரித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தொகுதி வரையறை என்ற பெயரில் பெரிய சூழ்ச்சி நடக்கிறது. ஹிந்தி பேசும் வடமாநிலங்களுக்கு தொகுதியை அதிகப்படுத்தி, தென்னகத்தையும், எதிா்க்கட்சிகளையும் அழிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய உள்நோக்கம் என்ன? தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் தோ்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் இதற்கான அவசரம் என்ன? நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதையும், பாஜக செய்யவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஜனநாயகத்தை விரும்பும் எந்த மாநிலமும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.
தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மேற்குவங்க மாநிலங்கள் இதை எதிா்க்கின்றன என்றாா்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: கி. வீரமணி

திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் வரும்

‘மூன்றாம் பாலினத்தவா்’ சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


