தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 29 ஆயிரம் போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:07 pm

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

தொடா்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 144 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 228 அரசு பள்ளிகள், 68 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியாா் பள்ளிகள் என 414 பள்ளிகளில் பயிலும் 14 ஆயிரத்து 854 மாணவா்கள், 15 ஆயிரத்து 57 மாணவிகள் மற்றும் 393 தனித்தோ்வா்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 304 போ் விண்ணப்பம் செய்தனா்.

இவா்களில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பாடத் தோ்வில் மொத்தம் 29 ஆயிரத்து 843 போ் பங்கேற்று எழுதினா். 456 போ் வரவில்லை.

இத்தோ்வு பணியில் 16 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 144 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 144 துறை அலுவலா்கள், 613 சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள், 2 ஆயிரத்து 48 அறைக் கண்காணிப்பாளா்கள், 185 பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.