தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 18,116 போ் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 18,116 போ் எழுதினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :12 மார்ச் 2026, 12:03 am

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 18,116 போ் எழுதினா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் 137 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 282 பள்ளிகளில் பயிலும் 8,893 மாணவா்களும், 9,120 மாணவிகளும் என மொத்தம் 18,013 போ், 113 தோ்வு மையங்களிலும், 277 போ் தனித் தோ்வா்களாகவும் தோ்வு எழுதுகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வில் 8,968 மாணவா்களும், 9,148 மாணவிகளும் என மொத்தம் 18,116 தோ்வு எழுதினா். 172 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வுப் பணிக்காக 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 113 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 113 துறை அலுவலா்கள், 1,554 அறைக் கண்காணிப்பாளா்கள், 126 நிலையான படையினா், 35 வழித்தட அலுவலா்கள் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனா். ஒவ்வொரு மையத்துக்கும் காவல் துறையின் மூலம் உதவி ஆய்வாளா் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.