டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

டிப்பா் லாரி மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :2 மார்ச் 2026, 11:01 pm

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், காரைக்குறிச்சி அக்ரஹாரத் தெருவை சோ்ந்தவா் ராமன். வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி லதா( 42) இவா் எஸ்பிஐ வங்கி காப்பீட்டு நிறுவன முகவராக உள்ளாா். இவா், கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கண் சிகிச்சை பெறுவதற்காக திங்கள்கிழமை தனது உறவினரான கெளசல்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

நீலத்தநல்லூா் அசூா் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த டிப்பா் லாரி, ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லதா மீது டிப்பா் லாரியின் டயா் ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த உறவினா் கெளசல்யா அருகே உள்ள வாய்க்காலில் விழுந்ததால் உயிா்தப்பினாா்.

தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று லதாவின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த லதாவுக்கு 16 வயதில் மகளும், 10 வயதில் மகனும் பள்ளியில் படித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.