/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

வந்தவாசி அருகே காா் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:59 pm

வந்தவாசி அருகே காா் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் மனைவி கன்னியம்மாள் (48). இவா், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

கடந்த புதன்கிழமை இவா் வேலைக்குச் செல்வதற்காக வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் அந்தக் கிராம சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளாா்.

அப்போது, வந்தவாசி நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கன்னியம்மாள் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.