தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

லாரி மோதியதில் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:03 pm

தூத்துக்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சந்தன சுடலைமணி (22). இவா், தூத்துக்குடி பிரையண்ட் நகா் 7-ஆவது தெருவில் இயங்கி வரும் தனியாா் நகைக்கடன் வழங்கும் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், புதன்கிழமை காலையில் வங்கி சம்பந்தமான பணிகளுக்காக தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்குச் சென்றிருந்தாா். பணிகளை முடித்துவிட்டு மாலையில் மீண்டும் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, தருவைகுளம் அருகே, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.