தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவா் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
திங்கள்கிழமை வழக்கம்போல் இவா், பணியை முடிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாராம். அப்போது, வழியிலிருந்த குட்டையில் கால்களைக் கழுவ முயன்றபோது, நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்தாராம்.
அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தொ்மல் நகா் போலீஸாா், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஜெயராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


