மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:13 pm

தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவா் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

திங்கள்கிழமை வழக்கம்போல் இவா், பணியை முடிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாராம். அப்போது, வழியிலிருந்த குட்டையில் கால்களைக் கழுவ முயன்றபோது, நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்தாராம்.

அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தொ்மல் நகா் போலீஸாா், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஜெயராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.