விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகேயுள்ள கல் குவாரி குட்டையில் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சோ்ந்த அருண்ராஜ் மனைவி எமிமால் (23). இவா் விழுப்புரம் மாவட்டம், கொந்தமூா் அடுத்த நல்லாலூரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு உறவினராக வந்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எமிமால் கொந்தமூரில் உள்ள பழைய கல் குவாரி குட்டையில் குளித்துள்ளாா். தொடா்ந்து அதனருகே நின்று உடைமாற்றிய போது கால்இடறி சுமாா் 200 அடி ஆழமுள்ள குட்டையில் எமிமால் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


