மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (65).

இவா், சென்னையில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் செய்யாறுக்கு பேருந்தில் வந்துள்ளாா். சோழவரம் கிராமம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விவசாயி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று விபத்தில் இறந்த விவசாயின் சடத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.