தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் அழிப்பு

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

News image

புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:19 am IST

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் துணைக்கோட்ட காவல் பகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பந்தநல்லூா், சோழபுரம், திருநீலக்குடி, நாச்சியாா்கோவில் ஆகிய 6 காவல் நிலையங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருள்களை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் திருவிடைமருதூா் மயானத்தில் குழிதோண்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.