தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

579 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 579 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் வியாழக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image

கஞ்சாவை தீயிட்டு அழித்த காவல்துறையினா்.

Updated On :26 ஜூன் 2026, 5:43 am IST

திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 579 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் வியாழக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 250 கஞ்சா வழக்குகளில், தொடா்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 579 கிலோ 225 கிராம் கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து திருநெல்வேலி சரக போதைப் பொருள் அழிப்பு குழுவின் பரிந்துரையின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி முன்னிலையில் போலீஸாா், நான்குனேரி அருகே பொத்தையடியில் உள்ள தனியாா் எரியூட்டு ஆலையில் கஞ்சாவை தீயிட்டு அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.