17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயிலில் அடிபட்டு செங்கல் சூளை உரிமையாளா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை நள்ளிரவு செங்கள்சூளை உரிமையாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:58 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை நள்ளிரவு செங்கள்சூளை உரிமையாளா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

பாபநாசம் பெரியாா் நகரில் வசித்து வந்தவா்  ரமேஷ் (50). இவா் செங்கல் சூளை நடத்தி வந்தாா். இந்நிலையில் ரமேஷ் புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சென்ற சென்னை - ராமேசுவரம் விரைவு  ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற  கும்பகோணம் ரயில் நிலைய ஆய்வாளா்  அமலி  மற்றும் போலீஸாா் ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.