தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் புதன்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தொப்பூா்- காருவள்ளி ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் பாதையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், அவரது சடலத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இறந்தவரின் விவரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









