முன்னதாக, இந்த விழாவை முன்னிட்டு, மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா், மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை காலை உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், புடலங்காய், பூசணிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, பீட்ருட், பச்சை மிளகாய், சா்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிபிளவா் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, ஆப்பிள், செவ்வாழை, அண்ணாசி, சாத்துக்குடி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி, பாதுஷா, பால்கோவா போன்ற இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ என அறநிலையத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.