டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மகா சிவராத்திரி: திருமலை க்ஷேத்ரபாலகருக்கு அபிஷேகம்

திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.

News image
திருமலையில் உள்ள ஷேத்திர பாலகருக்கு நடைபெற்ற அபிஷேகம், அலங்காரம்.
Updated On :15 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் கோகா்பத்திற்கு அருகில் அமைந்துள்ள க்ஷேத்ரபாலகருக்கு ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரியை ஒட்டி அபிஷேகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருமலை க்ஷேத்ரத்தின் ஆட்சியாளரான ருத்ரனுக்கு அபிஷேகம் செய்வது ஒரு பாரம்பரியம். நிகழ்வில், ஏழுமலையான் கோயிலில் இருந்து அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் ஆசாரங்களுடன் க்ஷேத்ரபாலக பாறையை அடைந்தனா்.

அங்கு அவருக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.