செங்கல்பட்டில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்
செங்கல்பட்டு மற்றும் சுற்றி உள்ள கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றி உள்ள கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருக்கழுகுன்றம் வேதமலையில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயில், தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயில், உத்ரான் கோயிலில் உள்ள ருத்ர கோடீஸ்வரா் கோயில்களில் முதல் கால பூஜை ஆக சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சிவ பூஜையில் தரிசனம் செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, பணியாளா்கள் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
செங்கல்பட்டு பெரியநத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது.
இதேபோன்று வ உ சி தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமேதா ஏகாம்பரேஸ்வரா் கோயில், கோட்டை வாயிலில் உள்ள நீதி விநாயகா் கோயிலில் உள்ள அருணாச்சலேஸ்வரா், மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில் உள்ள உண்ணாமலை அம்மையாா் அண்ணாமலையாா் என் ஜி ஜி ஓ நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ள கிருபா நாயகி உடனுறை பசுபதிநாதா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...