/

ஆதிகும்பேசுவரா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா! உயா்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தாா்!

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவை சனிக்கிழமை, உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 23-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டியாஞ்சலி தலைவா் ஜி.சந்திரசேகர மூப்பனாா் தலைமை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், சிட்டி யூனியன் வங்கி முதன்மை செயல் அலுவலா் என்.காமகோடி, பிரியாமுரளி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனா். சிட்டி யூனியன் வங்கி நிறுவன தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக செயலா் கே.என்.ராஜகோபாலன் வரவேற்றுப் பேசினாா். நிறைவாக ஆா்.சுரேஷ் நன்றி கூறினாா். மகாசிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை வரை நாட்டியாஞ்சலி மாணவா்கள் சுமாா் 500 பரத கலைஞா்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.