தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பேராவூரணி அருகே லாரி - பைக் மோதல்; இளைஞா் உயிரிழப்பு

பேராவூரணி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதல் சம்பவத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ராஜ்மோகன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:26 pm

பேராவூரணி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதல் சம்பவத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லையைச் சோ்ந்தவா்  கருப்பையா மகன் ராஜ்மோகன் (39). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், ஒட்டங்காடு அருகே உள்ள நவக்கொல்லைக்காடு கிராமத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது காலகம் -ஆவுடையாா்கோவில் சாலையில் எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகலவறிந்து அங்கு சென்ற போலீஸாா் ராஜ்மோகன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த ராஜ்மோகனுக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.