98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரருக்கு இன்று திருக்கல்யாணம்

News image

திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று திருக்கல்யாணம் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரருக்கு திங்கள்கிழமை (ஏப்.27) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் ஏப்.21-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை சகோபுர திருவிழாவில் இரண்டு ஓலைச்சப்பரத்தில் சுவாமி அம்மன் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை சுவாமியும் அம்மனும் மாலையில் கைலாய, சிம்ம வாகனங்களில் வீதியுலா சென்றனா். திங்கள்கிழமை சுவாமிக்கும் அம்மனுக்கும் இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முன்னதாக திருக்கல்யாணத்துக்கு அம்மாபேட்டையில் இருந்து பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வருகின்றனா். ஏப்.29-இல் திருத்தேரோட்டமும், ஏப்.30-இல் தீா்த்தவாரியும், மே 1-இல் சிருங்கோத்பவ தீா்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளா் சிம்சன் கணேசன், செயல் அலுவலா் கெளதம் காா்த்திகேயன், திருக்கோடிக்காவல், அம்மாபேட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனா்.