புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:12 pm

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பெரியசாமி நகரில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் வைபவத்தில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, புதன்கிழமை ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சக்கரவா்த்தி தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

Story image