கும்பகோணத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது,
அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மின்விளக்கு, மின்விசிறிகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.
மேலும், தேவையான பணிகள், ஊடக மையத்துக்கான வசதிகள், கட்டுப்பாட்டு அறைக்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியா் அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.எம். திருமலை, பாபநாசம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், திருவிடைமருதூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சந்திரகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


